நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எல்லைக் கோடு: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

எல்லையொன்று   வேண்டும்   எதற்கொன்றும் ,  அதுவே
             இன்னல்கள்   வாராமல்   காக்கின்ற   சக்தி !
வல்லவனே   என்றிட்டு   ஆகிட்டப்   பின்னும்
             வாழ்வினில்   நெறிகள்தனைக்   காத்திடல்   வேண்டும் !
இல்லையென்    றாகிட   எதுவொன்றும்   விஷமாம்
             இன்னதனை   உணரார்க்கு   இழிவேதான்   பலனாம் !
செல்வவளம்   எல்லைதனைக்   கடக்கவே   தூண்டும் ,
             சிறிதுமே   வழுவாமல்   நெறிகாக்க   வேண்டும் !
காதலுற்ற   போதிலும்   எல்லைதனை   அவர்கள்
             கடக்கா   திருப்பதே  நெறிமிக்க   செயலாம் !
பேதயர்கள்   என்றாகி  எல்லையைக்  கடந்தே
             பெரும்பழி   தனையேற்றோர்   கதைகள்பல   உண்டே !
சேதமுறக்   கண்டுபின்   வாழ்வுதனை   இழந்தே
            சீரழிவைக்   காண்பதோ   காண்பவர்   சிரிக்க ?
ஏதமற்றக்  காதலது   என்றாகத்   தானே
            இனிமையே   மிஞ்சும்   என்றென்றும்   வாழ்வில் !
நாட்டிற்கும்   நாட்டிற்கும்   எல்லையொன்று   உண்டு
            நலமுடன்   அதுதன்னை   என்றென்றும்   காக்க !
வீட்டினை,   மக்களைப்   பிரிந்திட்டு   அங்கே
            விழிப்புடன்   காக்கின்ற   வீரர்களைப்  போற்று !
கோட்டினைத்   தாண்டிவரும்   எதிரிகளைக்   கண்டு
            கொல்வதில்   தவறில்லை , தருமமே   அதுவும் !
ஆட்டமிடும்   எதிரிகளை   அடக்கத்தான்   வேண்டும்
            அதற்காக   இன்னுயிரை   ஈயவும்   தகுமாம் !
எல்லைகள்   அற்றதாம்   அறிவுலகம் --- கற்கும்
             எழுச்சியைக்   கொண்டிட்டு   அளந்திடணம் !
கல்வியைக்   கற்றிட்டுத்   தேர்ந்திட்டும் ---- அதன்
             கரைதனைக்   கண்டவர்   எவர்தானோ ?
நல்வித   நெறிகளைக்   கொள்வதற்கும் ----  வாழ்வில்
             நால்வகை   வளங்களைச்   சேர்ப்பதற்கும்
செல்வத்தை   வாரியே   வழங்குதற்கும் ----  யார்தான்
             செப்பிடத்   தகுமோ   எல்லைதனை  !
எல்லைதனைக்   கடந்திட்டு   இன்னலுற்ற   சீதையளின்
நல்கதையை   உலகமதே   நன்கறியும் ! ----அல்லலதே
பரிசென்றும்   ஆகிடுமாம் ,பழியுறவும்   நேர்ந்திடுமாம் ;
நெறிகாக்க    மறவாதே   நீ !
விளக்கமுற்று   என்றும்நல்   விவேகமுடன்   செயலாற்ற
உளமதிலே   தெளிவுற்று   உயர்வடைக ! ---- களந்தனிலே
எல்லைதனைக்   கடக்காமல்   என்றென்றும்   வாழ்ந்திட்டு
நல்லயெதிர்   காலமதை   நாடு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.